"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, July 2, 2012

திரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்




தமிழ்மணம் நேயர்களுக்கு வணக்கம். நிகழ்காலத்தில் சிவா என சுயகுறிப்பில் பெயர் இடம் பெற்றிருந்தாலும் என் இயற்பெயர் சிவசுப்பிரமணியன். பிறந்தது வளர்ந்தது இருப்பது எல்லாமே திருப்பூர்தான்.:)

திருப்பூரில் பனியன் உற்பத்தி துறையில் சுயதொழில் செய்து கொண்டு இருக்கிறேன். உழைப்பால் உயர்ந்தவன் என்று என்னை நானே தட்டிகொடுத்துக்கொள்வது உண்டு. உடலுக்கு வயது நாற்பதை தாண்டிவிட்டது. சிறுவயது முதல் எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருந்ததாலும், எதோ ஒரு வெறுமையை மனம் உணர்ந்ததாலும் ஆன்மீகத்தின் பக்கம் சாய்ந்தேன்.

Wednesday, June 20, 2012

மூச்சு விடுவது எப்படி ?

நேரம் காலம் தெரியாம கணினி முன் அமர்ந்து வேலை செய்யலாம்.  படிக்கலாம் அல்லது  ஓய்வில் இருக்க்லாம். என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அப்போது அல்லது எப்பவாவது மூச்சைக்கவனித்து இருக்கிறோமா?

அதென்ன மூச்சைக் கவனித்தல்? மூச்சைக் கவனித்தால் மனம் அடங்கும் என்கிற நுட்பங்களுக்குள் நாம் செல்ல வேண்டுமா? மேலோட்டமாக பார்த்தால் போதாதா.?

Monday, May 7, 2012

மனிதருள் வேறுபாடு ஏன் ?



கருவமைப்பு, உணவு வகை, காலம், தேசம்,
கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,
பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,
பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றிற்கேற்ப
உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி
உடல்வலிவு, சுகம், செல்வம்,மனிதர்கட்கு
வரும் வகையும் அவற்றின் தரம் அளவுக்கேற்ப
வாழ்க்கைநிலை பேதமுடன் தோன்றக் கண்டேன்.


Friday, April 20, 2012

போடா வெண்ணை.....

நம்பிக்கை என்பதன் மீதுதான் நமது வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. உயிர் பயம் நமக்கு இல்லை என்று மார்தட்டினாலும்  கூடி வாழும் சமுதாய விலங்கு என்ற வார்த்தைக்கு பொருத்தமாக பாதுகாப்பை முன்னிறுத்தியே கூடி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குழுவாய் இருக்கிறோம் என்ற உணர்வே தைரியமாய் நம்மை வாழ வைக்கிறது.

பாதுகாப்பு என்ற அம்சத்தை உள்ளடக்கியே என் மதம், என் சாதி, என் கட்சி, என் இனம், என் நாடு என்று இணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதில் தவறேதும் இல்லை. ஆனால் இதன்பொருட்டு பிறரை இம்சை பண்ணும்போதுதான் இவையெல்லாம் அவசியமா என தோன்றுகிறது.  என் மதம், என் சாதி, என் இனம், என் கட்சி என இவற்றை நான் நிறுவ முனையும்போது பிறரை தொந்தரவு செய்யாமல் இருக்க முடிவதில்லை.

Wednesday, March 28, 2012

சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்!


இயற்கை விளைபொருள் அங்காடியை நடத்தும் சாகுல் ஹமீது:
அரிசியை மொத்தமாக சாக்குகளாகத் தூக்குவது தான் பெரும்பாலான வீடுகளில் வழக்கம். பத்து நாள் வெளியூர் சென்று வந்து பார்த்தால், சின்ன பூச்சிகள் வந்திருக்கும். இதைத் தடுக்க, கடையில் இருந்து சாக்கு அல்லது பையில் வாங்கி வரும் அரிசியை, அண்டா, தூக்குவாளி என்று பெரிய எவர்சில்வர் பாத்திரத்திலோ, பிளாஸ்டிக் டப்பாவிலோ மாற்றி, மூடிவைத்து விடவேண்டும். அரிசியின் மேற்புறம் கொஞ்சம் வேப்பம் தளிர் அல்லது காய்ந்த மிளகாய் வற்றலைப் போட்டு வைத்தால், பூச்சி, வண்டு எதுவும் அண்டாது.

Thursday, February 16, 2012

காதலுடல் -- பண்புடன் இணைய இதழுக்காக

பசித்துப் புசி என்பது நமக்குத் தெரிந்த விசயம்தான்., நடைமுறையில் பசித்துப்புசிப்பவர்கள் கொஞ்சம் பேர்தான் :) பசி என்பது பல நேரங்களிலும் நமக்கு போதுமான அளவு ஏற்படுகின்றதா என்றால் இல்லை என்பதே உண்மை.

பசி என்கிற உணர்வு ஒரு தூண்டுதலாக ஆரம்பமாக சிக்னல் என்ற அளவில்தான் நமக்கு நம் உடலால் உணர்த்தப்படுகிறது.இதையே நாம் பசி என்பதாக எடுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். உடலுக்குக்கூட இரவு 6 மணி நேரமோ 8 மணிநேரமோ ஓய்வு கொடுத்து விடுகிறோம். நம் வயிற்றுக்கு ஓய்வு என்பதே இல்லை. ஏறத்தாழ 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து உடலைப்பற்றி சில சிந்தனைகள் பண்புடன் இணைய இதழுக்காக..... பிப்ரவரி 15க்கான ஆசிரியர் பொறுப்பு ஏற்று இருக்கும் சேர்தளம் வெயிலான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பகிர்ந்து கொண்டது உங்களின் பார்வைக்கு...... படித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே..