பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம். காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். கால்சியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண் தான். பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும்.
"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Saturday, December 17, 2011
Tuesday, November 15, 2011
ஏற்றுக்கொள்வதா..? ஒத்துக்கொள்வதா....?
நாம் எந்த ஒரு விசயமாக இருந்தாலும் ஓரளவிற்கு அதைப்பற்றி அறிந்தே வைத்திருக்கிறோம். அது அரசியலாகட்டும். ஆன்மீகம் ஆகட்டும். தொழில் சார்ந்த நடவடிக்கைகள் ஆகட்டும், உறவுகள் ஆகட்டும். நமக்கென ஒரு கருத்து நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது.
நம் கருத்துடன் ஒத்துபோகிறவர்கள் நமக்கு நண்பர்கள். நம் கருத்தை (முழுமையாக) எதிர்ப்பவர்களோடு நமக்கு ஒட்டுதல் வருவதில்லை என்பது யதார்த்தம். அதையை மீறி நட்பு எனில் அந்த கருத்து இருவருக்குமே அவ்வளவு முக்கியமானதில்லை என்பதே உண்மை.
நம் கருத்துடன் ஒத்துபோகிறவர்கள் நமக்கு நண்பர்கள். நம் கருத்தை (முழுமையாக) எதிர்ப்பவர்களோடு நமக்கு ஒட்டுதல் வருவதில்லை என்பது யதார்த்தம். அதையை மீறி நட்பு எனில் அந்த கருத்து இருவருக்குமே அவ்வளவு முக்கியமானதில்லை என்பதே உண்மை.
Tuesday, October 25, 2011
திருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவு
திருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.
நான் தற்போதுதான் திருக்கைலை யாத்திரை 2011 தொடர் எழுதியிருந்தேன். அப்போது பலரும் என்னிடம் தகுந்த பயண ஏற்பாட்டாளர்களை அறிமுகப்படுத்தக் கேட்டிருந்தார்கள்.
நான் தற்போதுதான் திருக்கைலை யாத்திரை 2011 தொடர் எழுதியிருந்தேன். அப்போது பலரும் என்னிடம் தகுந்த பயண ஏற்பாட்டாளர்களை அறிமுகப்படுத்தக் கேட்டிருந்தார்கள்.
Thursday, October 20, 2011
நானும் அப்பாடக்கர்தான்...தமிழ்மணம்
இது பற்றி பேசவே கூடாது. தமிழ் வலையுலகமே கொந்தளித்துக்கொண்டு இருக்கும்போது, அந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையில் எனது கருத்துகள் எரிகிற தீயில் எண்ணையாக பார்க்கப்பட்டு, இன்னும் தூண்டுதலாக அமைந்துவிடுமோ என நினைத்து முடிந்தவரை பகிர்வதை தவிர்த்தே எழுதியும் டிராப்டில் போட்டுவிட்டேன்.;)
Wednesday, October 19, 2011
மனமென்பது மாயமா?--கழுகு வலைதளத்தில்
நண்பர்களே., வலைதளத்தில் நான் சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து வந்தாலும்,கழுகு என்ற வலைதளம் சமுதாய விழிப்புணர்வு நோக்கோடு, தனிமனிதனின் உயர்வு சமுதாயத்தின் உயர்வு என்ற் உணர்வுடன் இயங்கி வருகின்றது.,
Saturday, October 8, 2011
பாத்திரத்தை பொறுத்தது உணவின் சுவையும், தரமும்!
இன்று பெரும்பாலானோர், சில்வர் பாத்திரத்தில் தான் சமைக்கின்றனர். இதில் சமைப்பதால் நன்மை, தீமை ஏதுமில்லை.
வெண்கலப் பாத்திரத்தில் சமைத்த உணவால், உடல் சோர்வு நீங்கும். இதில் சமைத்த உணவுப் பொருட்களுக்கு, "புட் பாய்சன்' ஆகும் வாய்ப்பு குறைவு என்பதால், இன்றும் கோவில்களில் சமைப்பதற்கு வெண்கலப் பாத்திரத்தை பயன்படுத்துகின்றனர்.
வெண்கலப் பாத்திரத்தில் சமைத்த உணவால், உடல் சோர்வு நீங்கும். இதில் சமைத்த உணவுப் பொருட்களுக்கு, "புட் பாய்சன்' ஆகும் வாய்ப்பு குறைவு என்பதால், இன்றும் கோவில்களில் சமைப்பதற்கு வெண்கலப் பாத்திரத்தை பயன்படுத்துகின்றனர்.
Thursday, October 6, 2011
திருக்கைலாய யாத்திரை நிறைவு செய்தல்
திருக்கைலாய யாத்திரை ஆரம்பித்தபோது நாங்கள் நேபாளில் காட்மாண்டு சென்றபின் அன்றய தினமும் அதற்கு அடுத்த நாளும் தங்க வேண்டியதாயிற்று. அப்போது நேபாளத்தில் பசுபதி நாதர் கோயில் சென்று தரிசனம் செய்தோம்.இங்கு புகைப்படம் எடுக்கத் தடை இருப்பதால் எதுவும் எடுக்கவில்லை. இங்கு பசுபதிநாதர் சிவலிங்கத்தில் நான்குமுகங்களோடு காட்சி அளிக்கின்றார். தரிசனம் முடித்த பின் அன்றைய தினம் மதியம் தங்கி இருந்த ஓட்டலில் ஓய்வு. மாலை பயணம் குறித்த விளக்க மீட்டிங்.
Saturday, October 1, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 26
எங்களை அழைத்துச் செல்ல இரண்டு ஜீப்கள் காத்திருந்தன. அனைவரும் அதில் ஏறி மானசரோவர் ஏரியை நோக்கி சென்றோம். அன்றைய தினம் காலையில் மற்ற யாத்திரீகர்கள் அனைவரும் முன்னதாக டார்சன் முகாமிலிருந்து மானசரோவர் சென்றுவிட்டனர்.
Friday, September 30, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 25
திருக்கைலாய யாத்திரையில் பரிக்ரமாவின் மூன்றாவது நாள் காலை 6.30 மணி அளவில் கிளம்பினோம். முன்னதாக பையில் வைத்திருந்த உலர்பழங்களை காலை உணவாக எடுத்துக்கொண்டோம். மற்றபடி புறப்படுவதில் எந்த சிரமமும் இல்லை. கூடவே யாத்திரை நிறைவு அடையும் நாள் வேறு:). நாங்கள் தங்கி இருந்த திராபுக் இடத்திற்கு சற்று முன்னதாக முந்தய நாள் மாலை எடுத்த படம் கீழே
Wednesday, September 28, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 24
கெளரிகுந்த் குளத்தைத் தாண்டி இறங்கி அதன்பின் இரண்டு குன்றுகளைத் தாண்டி வந்தபோது கண்முன்னே விரிந்தது கிட்டத்தட்ட குதிரை லாட வடிவிலான பள்ளத்தாக்கு. சுற்றிலும் மலைகள் ஓங்கி உயர்ந்து நின்றன.
Thursday, September 22, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 23
திருக்கையிலாய யாத்திரைக்கு என நான் கொண்டு சென்ற ஒரே பூசைப்பொருள் நறுமணம் கமழும் ஊதுபத்திகள் மட்டுமே..டோல்மாலாபாஸ் உச்சியை அடைந்தபோது, அங்கே நிறைய காகிதத்தால் ஆன கொடிகள் கட்டி அவைகளை இறைவனின் அடையாளங்களாக கருதி அவற்றிற்கு ஊதுபத்தி காட்டி வழிபடுகின்றனர்.
Monday, September 12, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 22
நடக்கவே சாத்தியம் இல்லை என்ற நிலையில் சில அடிகள் நடப்பது, பல நிமிடங்கள் ஓய்வெடுப்பது என மீண்டும் தொடர்ந்தேன். இந்த நிலை நீடிக்க நீடிக்க, கொஞ்சம் கொஞ்சமாக மனமும் "முடியல முடியல" எனச் சொல்லிக்கொண்டு வந்தது போய் ”முடியல” எனச் சொல்லவும் சக்தியற்று அமைதியாகத் தொடங்கியது. உயரம் செல்லச் செல்ல குளிர்காற்று இன்னும் அதிகமாகி உடலைத் துளைத்தது. .
Friday, September 9, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 21
ஆப்பிள் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மெள்ள மெள்ள நடக்க ஆரம்பித்தோம். இதுவரை நடப்பதற்கான பாதையேனும் ஓரளவிற்கு தெரிந்தது. இப்போது முழுக்க முழுக்க பாறைக்கற்கள் மேல் நடக்க வேண்டி இருந்தது. இடைஇடையே பனிக்குவியல் கிடந்தது. அந்த இடங்களையும் தாண்டிச் சென்றோம். அந்த பனிக்குவியல்களில் ஏற்கனவே யாத்திரீகர்கள் முன்னர் நடந்து சென்ற கால் தடங்களின் மீதே நாங்களும் நடந்து சென்றோம். பனிக்குவியலில் கால்கள் அரை இன்ஞ் முதல் ஒரு இன்ஞ் வரை புதைய ஆரம்பித்தது. இதைத் தவிர்கக இயலாது. கால் தடங்களைத் தவிர்த்து, விலகி,அருகில் கிடந்த பனியின் மீது நடக்க முயற்சிப்பது ஆபத்தே..
Wednesday, September 7, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 20
டோலமா லா பாஸ் அமைந்துள்ள மலையில் ஏறத் துவங்கினோம்.பார்வைக்கு சீக்கிரம் சென்றுவிடக்கூடிய தொலைவாகத்தான் தெரிந்தது. மணியைப் பார்த்தால் காலை 9.15. அதிகாலையில் இருந்து நடந்து கொண்டு இருந்ததால்
காலை உணவுக்கு வயிறு ஏங்க ஆரம்பித்தது. ஆனால் முதலிலேயே உணவு கிடைக்காது என்ற சொல்லப்பட்டு இருந்ததால், வயிற்றை சமாதானப்படுத்திக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம்.
காலை உணவுக்கு வயிறு ஏங்க ஆரம்பித்தது. ஆனால் முதலிலேயே உணவு கிடைக்காது என்ற சொல்லப்பட்டு இருந்ததால், வயிற்றை சமாதானப்படுத்திக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம்.
Thursday, August 25, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 19
காலை 7 மணிக்கு கிளம்பிய நாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தோம். சுமார் 9.15 மணிக்கு டோல்மாலாபாஸ் அமைந்திருக்கின்ற மலை அடிவாரத்தை அடைந்தோம். முதல் மூன்று படங்களும் போகும் வழியில் எடுக்கப்பட்டவை, திருக்கைலையை விட்டு சற்று விலகித்தான் இனி பாதை செல்லும். அதன் வழியே யாத்திரை தொடர்ந்தது...
Saturday, August 20, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 18
ஜீன் 15 ம் தேதி, விடியலுக்கு முன் எங்களை வழிகாட்டி தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டதோடு. இரவு மழை ஏதும் இல்லாததால், மற்ற குழுக்கள் செல்வதாகவும் நாங்களும் கிளம்பலாம் என எங்களின் இரண்டாவது நாள் பரிக்ரமாவை உறுதி செய்தார்.
Friday, August 19, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 17
மூன்று நாள் கோரா எனப்படும் பரிக்ரமாவில் உள்ள சிரமங்கள் அலசப்பட்டன. ஒரு நாள் பரிக்ரமாவை முடித்துக்கொண்டு, மறுநாள் திரும்பினால் கூடவே சமையல்குழுவும் இருப்பதால் உணவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மூன்று நாள் பரிக்ரமாவில் அடுத்த இரண்டு நாளுக்கு உணவு சமைக்க இயலாது. காரணம் பொருள்கள் கொண்டு போவதில் உள்ள சிரமங்கள்., இரண்டாம் நாள் பயண நேரம் 10-12 மணி நேரம் இருக்கலாம்.ஒரு ஆப்பிளும் ஒரு பாக்கெட் ஜீஸ் மட்டுமே ஒவ்வொரு வேளைக்கும் கொடுக்கப்படும். இதற்கு வருபவர்கள் தயாராக இருக்க வேண்டும்.:)
Tuesday, August 16, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 16
நடந்து வந்ததின் களைப்பு அனைவரிடத்திலும் ஆக்ரமித்து இருக்க, கிடைத்த படுக்கைகளில் அனைவரும் ஓய்வெடுத்தனர். வழக்கமான உரையாடல்கள் எதுவும் இல்லை:). விட்டால்போதும் என்கிற மனநிலை பலருக்கும்:)). அப்போது வழிகாட்டி வந்து அனைவரும் தயவு செய்து ஒரு மணி நேரம் உறங்க வேண்டாம். படுப்பதைவிட அமர்ந்து கொண்டால் நலம். உணவு தயாராகிக்கொண்டு இருக்கிறது என்றார்.
Monday, August 15, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 15
லா சூ பள்ளத் தாக்கில் திபெத்திய யாத்திரீகர்கள் எங்களைப்போல் பாதயாத்திரையாக வந்தாலும் தொடர்ச்சியாக நடக்கவில்லை.திருக்கைலை மலையை நாம் சிவமாக பார்த்தால், அவர்கள் மலை அமைந்த அந்த பீடபூமி பகுதி முழுவதையும் சிவமாகவே பார்க்கிறார்கள்!.
Tuesday, August 9, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 14
இந்த மேற்கு முக தரிசனத்திற்கு பிறகு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். நம்முடன் கூடவே வருகிறார்போல் திருக்கைலை நாதர் தோற்றமளித்துக் கொண்டே வந்தார். கூடவே நந்தி பர்வதம் மலையும்.,:)
Monday, August 1, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 13
இடுப்பில் மழையில் நனையாத பெல்ட், அதில் டார்ச், கொஞ்சம் பணம் யுவான், கேமரா, எக்ஸ்ட்ரா பேட்டரி, கழுத்தில் கயிறுடன் கூடிய UV கண்ணாடி, இது பனியில் சூரிய ஒளி பட்டு பிரதிபலிக்கும்போது புற ஊதா கதிர்களினால் கண் பாதிக்கப்படாமல் இருக்க, கையில் பனியிலும் நடக்க உதவியாக வாக்கிங் ஸ்டிக். தோளில் மாட்டியுள்ள பையில் ஒரு செட்காலுறை, கையுறை இவற்றுடன் பாதயாத்திரையாக கிளம்புவோம் என்பது நான் நினைத்துப்பார்க்காத ஒன்றே.
Thursday, July 28, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி-12
இரவு தூங்குமுன்னர் ஒரு சில அன்பர்கள் பச்சைக்கற்பூரத்தை பொடித்து தன் படுக்கையைச் சுற்றிலும் தூவிக்கொண்டனர். இது காற்றில் ஆக்சிஜனை இழுத்துக்கொடுக்கும். மூச்சித் திணறலை சமாளிக்கும். எனக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையே தவிர அவர்கள் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள்.
Wednesday, July 27, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி-11
மானசரோவரில் இருந்து கிளம்பி அந்த ஏரியை ஜீப்பிலேயே வலம் வந்தோம். தண்ணீர் கடல் அலைபோல வீசிக்கொண்டு இருக்க, தண்ணீரோ ஒரு துளி கூட கலங்கல் இல்லாமல் அடி ஆழம் வரை பார்க்கும் வண்ணம் இருந்தது. மறுகரையில் அனைத்து ஜீப்புகளும் நிறுத்தப்பட, கரையில் கிடந்த கற்களில் தனக்குகந்த மூர்த்தங்களை நண்பர்கள் பொறுக்கி எடுத்தனர். நான் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்துவிட்டேன். மானசரோவர் ஏரி இந்த இடம் அந்த இடம் என்று வேறுபாடு இல்லாது எல்லா இடத்திலும் அதன் சக்தியை எளிதில் உணர முடிந்தது.
Monday, July 25, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி-10
அடுத்தநாள் (12/06/2011)முழுவதும் மானசரோவரில்தான் தங்கினோம். நாங்கள் ஒருநாள் முன்னதாக வந்துவிட்டது முக்கிய காரணம், தட்பவெப்பநிலையை, உடல் ஏற்றுக் கொள்ள இன்னும் உதவியாக இருந்தது.கூட வந்த நண்பர் தனுஷ்கோடி (வயது 60)அவர்களுக்கு உணவு முறைகள் ஒத்துகொள்ளாமல் உணவை நிறுத்தி விட்டார். என்னால் பரிக்ரமா செய்ய நிச்சயம் முடியும். இதை சொல்வதைவிட செய்துகாட்டுவேன் என்றவர், இரவு மானசரோவர் குளிர் தாங்க முடியாமலும், உணவை அடியோடு ஒதுக்கி விட்டதாலும், பரிக்ரமா தேவையில்லை. வீடு சென்று சேர்ந்தால்போதும் என்றார். இதை நான் இங்கே குறிப்பிடக்காரணம். அவரை குறை சொல்வதற்காக அல்ல.
Friday, July 22, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 9
மானசரோவர் ஏரியில் குளிக்க சென்றோம். அருகில் சென்ற போது சிறுபுற்கள் நிறைய நீருக்குள் இருந்தன. சேறு மாதிரி தெரிந்ததே ஒழிய, காலில் ஏதும் ஒட்டவில்லை. நீருக்குள் இறங்கியபோது சுனைநீரில் இருக்கும் ஜில்லென்ற தன்மை இருந்தது. . இயல்பாக நீராட முடிந்தது. கரையிலிருந்து சுமார் 100 அடி தூரம் நடந்தும் முழங்காலைவிட சற்றே மேலாக நீர்மட்டம் இருந்தது.
Thursday, July 21, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 8
மானசரோவர் ஏரி கண்களில் பட்டதுமே சிறு குழந்தை போல் உள்ளம் துள்ளியது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை தண்ணீர்தான். கடலைப் போல் பரந்து விரிந்து கிடந்தது ஏரி. வாகனத்தை விட்டு இறங்கியதுதான் தாமதம். எப்போது மானசரோவரில் நீராடலாம் என்கிற ஆர்வம் அடக்க முடியாததாக இருந்தது.
Saturday, July 16, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 7
பொதுவாக நியாலத்தில் இருந்து கிளம்பி,(230கிமீ தாண்டி)பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள சாகா என்கிற ஊரில் தங்குவதே வழக்கம். ஆனால் அங்கு இடமில்லை என்று அதற்கு அடுத்ததாக(மொத்தம் 375 கிமீ) டோங்பா என்ற இடத்தில் ஏழுமணிநேரம் ஜீப்பில் பயணித்து தங்கினோம். இடமில்லை என்ற காரணம் உண்மையானதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் சாகா ஊரை கடக்கும்போது அங்கு நிறைய தங்கும் வசதியுடைய கட்டிடங்கள் இருந்தன. ஒருவேளை கட்டணங்கள் அதிகமாக இருந்திருக்கலாம். நமது வழிகாட்டி பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக டோங்பா சென்றிருக்கலாம் என்பது என் கணிப்பு, டோங்பா வசதிகள் மிகக்குறைவாகவே இருந்தது.
Wednesday, July 13, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 6
மலைமீது ஏறினால் அங்கே இதுவரை காணாத பனிபடர்ந்த மலையின் காட்சி என்னைக் கட்டிப்போட்டது. இந்த யாத்திரையில் முதன்முதலாக பனிபடர்ந்த மலைகள், கயிலைநாதனைக் காணச் செல்லும் நமக்கு கட்டியம் கூறுவது போல் காட்சியளித்தன.
Tuesday, July 12, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 5
இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது லேசாக தலைசுற்றல் ஆரம்பித்தது. அப்படியே அமர்ந்தவாறு மூச்சை மெதுவாகவும், ஆழமாகவும் இழுத்துவிட்டுக்கொண்டே என்னுள் நடப்பதை கவனித்தேன். மெல்ல காது அடைத்தது. நண்பர்கள் பேசுவது எல்லாம் கேட்பது குறையத்துவங்க, கண்ணுள் பூச்சி பறந்தது. இதெல்லாம் சுமார் 20 முதல் 30 விநாடிக்ள் இருக்கும்.
மூச்சைக்கவனிக்க ஆரம்பித்துவிட, அப்படியே எல்லாம் அடங்கி உடல் இயல்பான நிலைக்குத் திரும்பியது. இதுவும் உயர்மட்டத்தில் உடல் தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் தந்திரம்தான். இதற்குப்பின் எந்த இடத்திலும் இதுபோன்ற எந்த அறிகுறிகளும் வரவில்லை.
மூச்சைக்கவனிக்க ஆரம்பித்துவிட, அப்படியே எல்லாம் அடங்கி உடல் இயல்பான நிலைக்குத் திரும்பியது. இதுவும் உயர்மட்டத்தில் உடல் தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் தந்திரம்தான். இதற்குப்பின் எந்த இடத்திலும் இதுபோன்ற எந்த அறிகுறிகளும் வரவில்லை.
Monday, July 11, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 4
நியாலத்தில் அன்று இரவு தங்கினோம். ஒரு அறையில் 7 பேர், கிட்டத்தட்ட சின்ன சின்ன குழுக்களாக எங்களை அறியாமலே சேர்ந்துவிட்டோம். மாலைவரை உடலில் குளிரின் தாக்கம் தெரியவில்லை. ஆனால் இரவு வந்தவுடன் குளிர் அதிகமாகிவிட்டது. இதை எப்படி தாங்குவது?
தெர்மல்வேர் என்கிற உடலை ஒட்டிய ஆடைகள் (உள்ளாடைகளுக்கு அடுத்ததாக)அணிந்து கொண்டோம். இந்த உடைகள் என்றால் என்ன என தெரியாமல் வந்த நண்பரும் உண்டு. இந்த உடைகள் உள்பக்கம் ரைசிங் என்கிற நுட்பத்தில் பஞ்சு வெளியே தெரியும் வண்ணம் செய்யப்பட்ட பனியன் துணியினால் ஆனது.
தெர்மல்வேர் என்கிற உடலை ஒட்டிய ஆடைகள் (உள்ளாடைகளுக்கு அடுத்ததாக)அணிந்து கொண்டோம். இந்த உடைகள் என்றால் என்ன என தெரியாமல் வந்த நண்பரும் உண்டு. இந்த உடைகள் உள்பக்கம் ரைசிங் என்கிற நுட்பத்தில் பஞ்சு வெளியே தெரியும் வண்ணம் செய்யப்பட்ட பனியன் துணியினால் ஆனது.
Thursday, July 7, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 3
நாங்கள் சீனப்பகுதியில் பயணம் செல்லும்போது, கூடவே லாரியில் எங்கள் பொருள்கள் அனைத்தும் டிராவல்ஸ்காரர்கள் கொடுத்த பெரிய தனிதனிப் பையில் பயணம் செய்தன. அதே லாரியில் 12 நாட்களுக்கான உணவுப் பொருள்கள், சமையல் பொருள்கள் வந்ததால் நியாலம் வந்து சேர்ந்த இரண்டு மணிநேரத்தில் உணவு தயாராகிவிட்டது.
Wednesday, July 6, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 2
நட்புபாலத்தில் எந்த வாகனமும் போக அனுமதி கிடையாது. நடந்துபோக மட்டுமே அம்மாம் பெரிய பாலம்., இது எதுக்குன்னு சீன அரசாங்கத்துக்கே வெளிச்சம். அந்த நட்புப்பாலத்தை கடந்தால் அந்த முனையில் இரண்டு சீன இராணுவ சிப்பாய்களின் சிலைகள் பாலத்தின் இருபக்கமும் கண்ணாடி கூண்டுக்குள் நின்று கொண்டிருந்தன.
நடுப்பாலத்தில் கடுமையான பாதுகாப்புச் சோதனைக்கு பின் சீன பகுதி பாலத்தில், செல்லும் வழியில் அந்த சிலைகளை அருகில் பார்த்தேன். சிலையின் கண் விழிகள் உருளத் தொடங்கின. சற்று பிரமிப்பாக இருந்தது. உற்றுப்பார்த்தில் இரண்டுமே சிலைகள் அல்ல., நிஜ சீன காவல்துறையினர். துளிகூட அசையாமல், முகத்திலும் எந்தவித உணர்ச்சியும் வெளிக்காட்டாது சிலையினை தோற்கடிக்கும் வண்ணம் இருபுறமும் நின்று கொண்டிருந்தனர். இது நமக்கு ஆச்சரியத்தை தந்தாலும், எங்களால் எதையும் செய்ய முடியும் சீன அரசாங்கம் நமக்கு தரும் செய்தியாகவே தெரிந்தது.
நடுப்பாலத்தில் கடுமையான பாதுகாப்புச் சோதனைக்கு பின் சீன பகுதி பாலத்தில், செல்லும் வழியில் அந்த சிலைகளை அருகில் பார்த்தேன். சிலையின் கண் விழிகள் உருளத் தொடங்கின. சற்று பிரமிப்பாக இருந்தது. உற்றுப்பார்த்தில் இரண்டுமே சிலைகள் அல்ல., நிஜ சீன காவல்துறையினர். துளிகூட அசையாமல், முகத்திலும் எந்தவித உணர்ச்சியும் வெளிக்காட்டாது சிலையினை தோற்கடிக்கும் வண்ணம் இருபுறமும் நின்று கொண்டிருந்தனர். இது நமக்கு ஆச்சரியத்தை தந்தாலும், எங்களால் எதையும் செய்ய முடியும் சீன அரசாங்கம் நமக்கு தரும் செய்தியாகவே தெரிந்தது.
Thursday, June 30, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 1
ஜீன் 5 ந் தேதி காலை டெல்லி பயணம், அங்கே பாஸ்போர்ட்களை டிராவல் ஏஜென்சி அன்பர் கொண்டு வந்து கொடுக்க, அப்படியே நேபாள் தலைநகர் காட்மண்டு வரை ஜெட் ஏர்வேஸ் விமான பயணம்.
எங்களது குழுவில் மொத்தமாக 40 பேர் தமிழகம், கேரளா மற்றும் மலேசியாவில் இருந்தும் சென்று காட்மண்டு ஹோட்டலில் மாலை ஒன்றிணைந்தோம்.
எங்களது குழுவில் மொத்தமாக 40 பேர் தமிழகம், கேரளா மற்றும் மலேசியாவில் இருந்தும் சென்று காட்மண்டு ஹோட்டலில் மாலை ஒன்றிணைந்தோம்.
Friday, May 27, 2011
படித்ததில் பிடித்தது 27/05/2011
செட்டிநாட்டு மண்ணில் வாழ்ந்து மறைந்த தமிழ் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் பாடல் ஒன்று படித்ததில் பிடித்ததாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.....
நன்றி:கவனகர் முழக்கம் மாத இதழ். மே 2011
வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா
நல் ஆவின் பால்முழுதும் கன்றுக்கில்லை
நறுமலரின் மணம் முழுதும் சோலைக்கில்லை
நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை
நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை
பழுக்கின்ற கனிமுழுதும் மரத்திற்கில்லை
பண்நரம்பின் இசைமுழுதும் யாழுக்கில்லை
எல்லாமே பிறர்க்கு(உ)ழைக்கக் காணுகிறேன்
என்வாழ்வும் பிறர்க்கு(உ)ழைக்க வேண்டும் வேண்டும்!
--வ.சுப.மாணிக்கனார்நறுமலரின் மணம் முழுதும் சோலைக்கில்லை
நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை
நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை
பழுக்கின்ற கனிமுழுதும் மரத்திற்கில்லை
பண்நரம்பின் இசைமுழுதும் யாழுக்கில்லை
எல்லாமே பிறர்க்கு(உ)ழைக்கக் காணுகிறேன்
என்வாழ்வும் பிறர்க்கு(உ)ழைக்க வேண்டும் வேண்டும்!
நன்றி:கவனகர் முழக்கம் மாத இதழ். மே 2011
வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா
Wednesday, May 25, 2011
எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 7
மே மாதம் முழுவதுமே சட்டசபைத்தேர்தல் முடிவினை எதிர்ப்பார்த்தும், கணிப்புகளும், கருத்துகளுமாக அனைவருமே பரபரப்பாக இருந்தனர் என்றால் அது மிகையில்லை. ஆக பரபரப்புகள் இப்போதைக்கு ஓய்ந்து விட்டது. நாம் அன்றாட அலுவல்களில், வாழ்வில் இன்னும் கவனம் செலுத்த வேண்டிய நிதர்சனத்திற்கு வந்துவிட்டோம்.
Friday, April 29, 2011
எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 6
நோய், மனச்சோர்வு, சந்தேகம் இவைகள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடைக்கற்கள் ஆகும். தொடர்ந்து பார்ப்போம்...
ஊக்கம் இன்மையும், சோம்பலும் பார்க்க வேறுவேறு ஆகத் தோன்றினாலும் இவைகள் அண்ணன் தம்பிகள்தாம்:)
ஊக்கம் இன்மையும், சோம்பலும் பார்க்க வேறுவேறு ஆகத் தோன்றினாலும் இவைகள் அண்ணன் தம்பிகள்தாம்:)
Thursday, April 28, 2011
எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 5
முதலில் தியானம் தவம் ஆகியவைகள் ஏன் நமக்கு சட்டென பிடிபடுவதில்லை என்பதற்கான காரணங்கள் என்ன?
சிலவிசயங்களை மேலோட்டமாகவே தருகிறேன். இவைகள் உங்கள் சிந்தனையைத் தூண்ட மட்டுமே. ஏனெனில் இவை மிக முக்கியமான அம்சங்கள். உங்கள் சிந்தனைக்கு இந்த கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் விளைவு கிடைக்கும்.
சிலவிசயங்களை மேலோட்டமாகவே தருகிறேன். இவைகள் உங்கள் சிந்தனையைத் தூண்ட மட்டுமே. ஏனெனில் இவை மிக முக்கியமான அம்சங்கள். உங்கள் சிந்தனைக்கு இந்த கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் விளைவு கிடைக்கும்.
Monday, April 25, 2011
எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 4
மனம் எதிர்கொள்ளும் எல்லா விசயங்களுக்கும் உடனடியாக எதிர்வினை ஆற்றும். அப்படி எதிர்வினையாற்றுவதே நம்மை அதன் வசத்தில் வைத்திருக்கும் தந்திரம் ஆகும். இதை தெளிவாக உணர்ந்து கொண்டாலே மனம் அடங்க ஆரம்பித்துவிடும்.
Thursday, April 21, 2011
எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 3
இந்தத் தொடரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏன் எழுந்தது? என யோசித்த போது எனக்குத் தெரிந்தவற்றை எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பதற்காகவா?..என்றால் கண்டிப்பாக இல்லை. ஒரு ஆசிரியரின் மனப்பான்மையோடு நான் எழுதவில்லை.
Tuesday, April 19, 2011
எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 2
எதிர்ப்பின்மை என்பது என்ன. இது மனதளவில் ஏற்பட வேண்டும். முதலில் மனம் எதனோடும் முரண்படாதிருத்தல் என்பதை புரிந்து கொள்வோம். அதெப்படி? என்று உங்கள் மனம் கேட்கும்:) இதுதான் எதிர்ப்பு என்பது. அதாவது உடனடியாக மனம் எதற்கும் எதிர்வினையாற்றும். அளவு கடந்த வேகத்துடன் அது இயங்கும்.
Friday, April 15, 2011
எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 1
ஆன்மீகம் என்பது என்ன? என்ற கேள்வி நமக்குள் எழாதவரை மனதிற்கு குழப்பம் ஏதும் இல்லை. நிம்மதியாக கோவிலுக்கு போனோமா, சாமி கும்பிட்டமான்னு பொழப்ப ஓட்டிவிடலாம். எந்த ஆராய்ச்சியும் எனக்கு வேண்டாம் என நிம்மதியாக காலந்தள்ளிவிடலாம்:)
Thursday, March 31, 2011
திமுக ஆட்சி இந்த ஒன்றிற்காகவேனும் ஒழியவேண்டும்:(
எல்லா அரசியல் கட்சிகளுமே சம்பாதிக்க மட்டுமே ஆட்சிக்கு வரத்துடிக்கிறார்களே தவிர மக்களுக்கு சேவை ஆற்ற அல்ல என்பதை நன்கு நாம் தெரிந்து வைத்திருந்தாலும் எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என அடையாளம் காண வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.
Tuesday, March 29, 2011
தேர்தல் கமிசனின் குழப்பமான உத்தரவுகள்.
தேர்தல் வந்தாலும் வந்தது. வழியில் செக்போஸ்ட் நடவடிக்கைகள் வேடிக்கையாகவே இருக்கின்றன. சரி அவர்கள் கடமையைத்தான் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்!! தேர்தல் கமிசன் என்ன சொல்லி இருக்கு. வாகனங்களை சோதனையிட்டு ஒரு லட்சத்திற்கு மேல் பணமாகவோ, அல்லது சந்தேகப்படும்படியான இலவசத்திற்கான பொருள்களோ இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும்.
Wednesday, March 23, 2011
மண்ணின் வாசம் - பருப்பாம் பருப்பாம்
ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் வீட்டுவாசலில்......
சின்னவள்:ஏய்., பருப்பாம் பருப்பாம் விளையாடலாம் வாடி..
பெரியவள்: சரி வா விளையாடலாம்..
சின்னவள்: ம்ம்.........கொழுத்தபன்னி
பெரியவள்: ஏய் அப்படி இல்லைடி ’முருங்கப்பூ’ அப்படின்னு சொல்லனும்
சின்னவள்: சொல்லமுடியாது. நீ ஏண்டி எங்கப்பாவை ’உங்கொப்பன்’னு சொன்ன.... போடி நா வரல விளையாட்டுக்கு....
சின்னவள்:ஏய்., பருப்பாம் பருப்பாம் விளையாடலாம் வாடி..
பெரியவள்: சரி வா விளையாடலாம்..
பருப்பாம் பருப்பாம் பன்னெண்டு பருப்பாம்
சுக்கத்தட்டி சோத்துல போட்டு
குள்ளீம்மா குழலூத
ராக்காத்தா வெளக்கெடுக்கங்
கொப்பம் பேரென்ன?
சின்னவள்: ம்ம்.........கொழுத்தபன்னி
பெரியவள்: ஏய் அப்படி இல்லைடி ’முருங்கப்பூ’ அப்படின்னு சொல்லனும்
சின்னவள்: சொல்லமுடியாது. நீ ஏண்டி எங்கப்பாவை ’உங்கொப்பன்’னு சொன்ன.... போடி நா வரல விளையாட்டுக்கு....
Tuesday, March 22, 2011
சதுரகிரி கோரக்கர் குகை - நிறைவுப்பகுதி
பெரிய மகாலிங்கத்தை தரிசித்துவிட்டு கீழிறங்கி வந்தவுடன் கஞ்சி மடத்தில் உணவருந்திவிட்டு சற்றே ஓய்வெடுத்தோம். பின் சற்று மேல் புறம் அமைந்துள்ள சந்தனமகாலிங்கம் சந்நதியை சென்று அடைந்தோம்.
சதுரகிரி பெரிய மகாலிங்கம் - பகுதி 9
தவசிப்பாறையிலிருந்து ஒட்டியே வலதுபுறமாக ஏறினால் தவசிப்பாறையின் மேல்பக்கத்திற்கு வந்துவிடலாம். அந்தப் பாறையின் உச்சியில் ஒன்பது சிறுபாறை கற்கள் உள்ளன. பக்தர்கள் இதை நவக்கிரக பாறை என அழைக்கிறார்கள்.
Monday, March 21, 2011
சதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)
சதுரகிரி மலையேற்றம் என்பதே பொதுவாக சுந்தரமகாலிங்கர், சந்தன மகாலிங்கர் இருவரையும் தரிசனம் செய்வதே ஆகும். சித்தர்கள் தரிசனம் வேண்டியும், அபூர்வ மூலிகைகளை தேடியும் இங்கு வருபவர்கள் இதில் சேர்த்தி இல்லை:) பெரும்பாலானோர் இவ்விரு சந்நதியுடன் தன் பயணத்தை நிறைவு செய்து அங்கு மடங்களில் இரவு தங்கியோ அல்லது உடனேயோ அடிவாரம் திரும்புகின்றனர்.
Monday, March 14, 2011
சதுரகிரி மலைப் பயணம். பகுதி - 7
பலாமரத்தடியில் அமர்ந்து இருக்கும் பிலாவடிக்கருப்பர் என்கிற சதுரகிரி காவல் தெய்வத்தின் கோவிலின் பின்புறம் தைலக்கிணறு இருப்பதாக சித்தர்களின் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.
Tuesday, March 1, 2011
சதுரகிரி மலைப் பயணம். பகுதி - 6
மலையேறும்போது சில விசயங்களை தெளிவு செய்து கொள்ளுங்கள். நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களின் வயது மற்றும் உடல்நலத்திற்கேற்ப பொருத்தமான நடை வேகத்தையும், ஓய்வெடுக்கும் நேரத்தையும் அவ்வப்போது முடிவு செய்து கொள்ளுங்கள். மற்றவர்களோடு எந்தக்காரணம் கொண்டும் போட்டி போட்டு ஏற வேண்டாம். வழியில் கொண்டுபோன உணவை மிகக்குறைவாக உண்ணுவது களைப்பு இல்லாமல் ஏற வசதியாக இருக்கும்.
Thursday, February 17, 2011
சதுரகிரி மலைப் பயணம். பகுதி 5
கோணத்தலவாசல் என்கிற Z வடிவிலான மலைஏற்றத்தைத் தாண்டினோம். அதிலிருந்து இன்னும் மேலேற காரம்பசுத்தடம் என்கிற இடத்தை கால்மணி நேர இடைவெளியில் தாண்டினோம். . இங்கு என்ன விசேசம் என்கிறீர்களா:)
Subscribe to:
Posts (Atom)