"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, May 27, 2011

படித்ததில் பிடித்தது 27/05/2011

செட்டிநாட்டு மண்ணில் வாழ்ந்து மறைந்த தமிழ் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் பாடல் ஒன்று படித்ததில் பிடித்ததாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.....


நல் ஆவின் பால்முழுதும் கன்றுக்கில்லை
நறுமலரின் மணம் முழுதும் சோலைக்கில்லை
நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை
நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை
பழுக்கின்ற கனிமுழுதும் மரத்திற்கில்லை
பண்நரம்பின் இசைமுழுதும் யாழுக்கில்லை
எல்லாமே பிறர்க்கு(உ)ழைக்கக் காணுகிறேன்
என்வாழ்வும் பிறர்க்கு(உ)ழைக்க வேண்டும் வேண்டும்!
                                                        --வ.சுப.மாணிக்கனார்






நன்றி:கவனகர் முழக்கம் மாத இதழ். மே 2011

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

Wednesday, May 25, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 7

மே மாதம் முழுவதுமே சட்டசபைத்தேர்தல் முடிவினை எதிர்ப்பார்த்தும், கணிப்புகளும், கருத்துகளுமாக அனைவருமே பரபரப்பாக இருந்தனர் என்றால் அது மிகையில்லை. ஆக பரபரப்புகள் இப்போதைக்கு ஓய்ந்து விட்டது. நாம் அன்றாட அலுவல்களில், வாழ்வில் இன்னும் கவனம் செலுத்த வேண்டிய நிதர்சனத்திற்கு வந்துவிட்டோம்.

Friday, April 29, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 6

நோய், மனச்சோர்வு, சந்தேகம் இவைகள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடைக்கற்கள் ஆகும். தொடர்ந்து பார்ப்போம்...


ஊக்கம் இன்மையும், சோம்பலும் பார்க்க வேறுவேறு ஆகத் தோன்றினாலும் இவைகள் அண்ணன் தம்பிகள்தாம்:) 

Thursday, April 28, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 5

முதலில் தியானம் தவம் ஆகியவைகள் ஏன் நமக்கு சட்டென பிடிபடுவதில்லை என்பதற்கான காரணங்கள் என்ன?

சிலவிசயங்களை மேலோட்டமாகவே தருகிறேன். இவைகள் உங்கள் சிந்தனையைத் தூண்ட மட்டுமே. ஏனெனில் இவை மிக முக்கியமான அம்சங்கள். உங்கள் சிந்தனைக்கு இந்த கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் விளைவு கிடைக்கும்.

Monday, April 25, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 4

மனம் எதிர்கொள்ளும் எல்லா விசயங்களுக்கும் உடனடியாக எதிர்வினை ஆற்றும். அப்படி எதிர்வினையாற்றுவதே நம்மை அதன் வசத்தில் வைத்திருக்கும் தந்திரம் ஆகும். இதை தெளிவாக உணர்ந்து கொண்டாலே மனம் அடங்க ஆரம்பித்துவிடும்.

Thursday, April 21, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 3

இந்தத் தொடரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏன் எழுந்தது?  என யோசித்த போது  எனக்குத் தெரிந்தவற்றை எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பதற்காகவா?..என்றால் கண்டிப்பாக இல்லை.   ஒரு ஆசிரியரின் மனப்பான்மையோடு நான் எழுதவில்லை.