"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, March 30, 2009

வந்துட்டீங்க…. சாப்பிட்டுவிட்டுதான் போகனும்

ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு தூரத்து உறவினரின் பெண் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுத்து அழைக்க உதவியாக, உடன் சென்றோம். ஒவ்வொரு வீடாக அழைப்பு, பத்திரிக்கை கொடுத்துக்கொண்டே வந்தோம்

ஒருவீட்டில் காபி,
அடுத்தவீட்டில் டீ,
அடுத்தவீட்டில் சுவீட்,காரம், காபி,
அதற்கடுத்த வீட்டில் பிஸ்கட்,காபி,
அதற்கடுத்த வீட்டில் தண்ணீர் மட்டும்
என வரிசையாக சாப்பிட வேண்டியதாகிவிட்டது.

இது போன்ற நிகழ்வுகளில் அன்றைய அடுத்தவேளை உணவை தியாகம் செய்து வயிற்றை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது என் வழக்கம்.

கடைசியாக சென்ற வீட்டில் எங்களுக்கு உணவு செய்ய சொல்லி சிக்னல் கொடுத்து விட்டார் எங்களுடன் வந்த உறவினர். எங்களை உபசரிப்பதாக நினைத்துக்கொண்டு. மணியோ ஏழுதான் ஆகிறது.

அந்த வீட்டுக்காரர் கோதுமை ரவை உப்புமா செய்யத் தொடங்கிவிட்டார். அன்போடு வேண்டாம் என்று மறுத்தும் கேட்கவில்லை. கெஞ்சியும் கேட்கவில்லை. கூடவந்த மேலும் இரு உறவினருக்கோ காலதாமதம் ஆகிக்கொண்டே இருப்பதால் கடுப்பாகிவிட்டனர். அவர்களின் மனநிலையைப் பற்றி சிறிது கூட சிந்திக்கவில்லை.

உப்புமாவிற்கு தயிர் பற்றாக்குறை, நன்கு புளித்த தயிரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு ஒரு வழியாக சமாளித்துவிட்டார்

சூழ்நிலைகள் தர்ம சங்கடமாக இருந்தபோதும் நாம்தான் ஜீரோ ஆயிற்றே. அமைதியாக ஏற்றுக்கொண்டு சாப்பிட்டு விட்டேன்.

சிந்தனை விரிந்தது.

என் வீட்டில் யார் பத்திரிக்கை கொண்டு, அழைப்பு சொல்ல வந்தாலும், தண்ணீர் மட்டுமே முதலில் தரவேண்டும் என்பது என் இல்லத்து அரசிக்கு நான் இட்டுள்ள அன்புக்கட்டளை. இதில் ’அவன் வீட்டுக்கு போய் பச்சத் தண்ணி கூட தரவில்லை’ என வருபவர்கள் சொல்லிவிடக் கூடாது என்பதும் அடக்கம்.

அதன் பின்னர் அவர்களிடம் என்ன வேண்டும், எனக் கேட்டு, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் உணவோ, டீயோ தரவேண்டும். அதுவும் ஒருமுறைக்கு மேல் கேட்கக்கூடாது.

உறவினர்கள் தன் அன்பை காட்டுவதாக எண்ணிக்கொண்டு, அவர்களும் திடீர் விருந்தாளிகளை சமாளிக்க சிரமப்பட்டுக் கொண்டு, வருபவர்களின் சூழ்நிலை அறியாமல், உபசரிப்பதை விடுத்து, சிரமப்படுத்தாமல் ”அவர்கள் இன்னும் பல இடங்களுக்கு போகவேண்டியது இருக்கும்.” என்பதை கருத்திற்கொண்டு அன்பாக நாலுவார்த்தை விசாரித்து அனுப்புலாம் அல்லவா?

இதிலும் சில வீடுகளில் சாப்பிட்டே ஆக வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஏற்கனவே சிறு பிணக்கு ஏதேனும் இருக்கலாம். நாம் பத்திரிக்கை கொடுக்கச் செல்லும் பொழுது சாப்பிட்டால் சமாதானமும், சாப்பிடாவிட்டால் பெரும் பிணக்காக மாறும் நிலை இருக்கலாம். இதனால் பெரும்பான்மையாக மற்ற இடங்களில் தண்ணீரே சாப்பிட்டால்தான் சவுகரியமாக இருக்கும். வயதானவர்கள் உடல்நிலையும் இதில் முக்கியம். விசேசத்தின் போது மருத்துவமனைக்கு செல்லும் நிலை தவிர்க்கலாம்.

இப்ப சொல்லுங்க , நீங்க யார்? கேட்காமலே தண்ணீர் மட்டும் தருபவரா?
வருபவரை காபி,டீ,டிபன்,சாப்பாடு சாப்பிட வற்புறுத்துபவரா?

Saturday, March 28, 2009

தீ வெச்சு எரிச்சுடுவேன்..ஜாக்கிரதை

திருப்பூரில் பனியன் கம்பெனிகள் ஏராளம். பெரிய கம்பெனிகளில் செக்யூரிட்டி, அலுவலக கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும். ஆனல் சிறிய கம்பெனிகளில் இவை ஏதும் அதிக அளவில் இருக்காது.

அதில் ஒன்று, வேலை நேரத்தில் பணியாளர்களை, வெளிஆட்கள் சந்திப்பது என்பது சிறிய கம்பெனிகளில் சாத்தியமான நிகழ்வு.

நண்பரின் நிறுவனத்திற்கு ஒருநாள் மதியம் சென்றுவிட்டு,பின்னர் வெளியே கிளம்பினேன். தரைத்தளம்,முதல் தளம் கொண்டது அக் கட்டிடம். வெளியே ஒரு நடுத்தர வயது திடகாத்திரமான, பெண் ஒருவர் , முதல் தளத்தில் உள்ள பெண் வேலையாளை பார்க்க வந்திருக்கிறார்.

அவர் கீழே நின்று கொண்டு, “என்னடா இது,கட்டிடத்தை இப்படி கட்டி வச்சிருக்காங்க.. நம்மால மேலவேற ஏறமுடியாதே..மூச்சு வாங்குமே..அந்தப்பெண்ணை கீழ இறங்கி வரச்சொல்லு..” என்று உயரே பார்த்து சப்தமிட்டுக் கொண்டு இருந்தார்...

இது நான் வெளியே கிளம்பிய தருணத்தில் கவனித்தது.

திரும்ப மாலைவேளையில் நண்பரின் கம்பெனிக்கு சென்றேன். அவர் முதல்தளத்தின் மொட்டைமாடியில் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட கசிவை சரிசெய்யும் பணியில் ப்ளம்பருடன் ஈடுபட்டிருந்தார்.

கொஞ்சநேரம் கழித்து, கீழிருந்து மேனேஜர், ஒரு பெண், முதலாளியை கட்டாயம் பார்க்கவேண்டும் என வற்புறுத்தியதாக மேலேயே அழைத்து வந்துவிட்டார். அந்தப் பெண் மதியம் நான் பார்த்த அதே பெண். யாரும்மா, என்ன வேணும்? என்று நண்பர் கேட்டவுடன்...

“கீழ இருக்கிறவனை ஒழுங்கா இருக்கச் சொல்லு, யாரவன், வேலைக்கு இருக்கிரானா, வாடகைக்கு இருக்கிரானா, தொலச்சுப்போடுவேன், போலிஸ்ல புடிச்சு கொடுத்திருவேன், ..”என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.

“சரிம்மா, என்ன என்று விசாரிக்கிறேன்” என நண்பர் சொல்லச்சொல்ல, “போலீசுக்கு போவேன்’" என அந்த பெண் மீண்டும் சொல்ல, ”சரி போய்க்கோம்மா” என்று நண்பர் சொன்னார்.

அதற்கு அந்த பெண் ”தீ வைத்து எரிச்சிடுவேன், கம்பெனியே காணாமல்
போயிடும், ஜாக்கிரதை, அத்தனை பொருளையும் தீ வைத்து கொளுத்திவிடுவேன்” என்று சத்தமிட்டார்.

அருகில் இருந்த நான் அதிர்ந்தேன். நண்பரைப் பார்த்தேன்.

கட்டிடத்தின் உரிமையாளரான நண்பரோ, சற்றும் அசராமல் ”எங்கே கடைசியாக சொன்னதை இன்னொருமுறை சொல்லு” என்றார்.

அந்தப்பெண் இந்த அணுகுமுறையை எதிர்பார்க்கவில்லை. ”என்னோடஇடத்தில் வந்து என் கட்டிடத்தையே தீ வைச்சிருவேன்னு சொல்றியா? பொம்பளைங்கிறதால தப்பிச்சிட்ட,” என்று நண்பர் குரலை உயர்த்த அந்தப்பெண் சட்டென கீழிறங்கி சென்றுவிட்டார்.

பின்னர் இதைப்பற்றி விசாரித்தேன். மதியம் அந்த பெண் சத்தமிட்டுக் கொண்டிருந்தபோது
யாரைப் பார்க்க வந்தாரோ, அந்த பெண் பணியாளரிடம், உதவிமேனேஜர் அந்தப் பொம்பிளையை சற்று பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த விசயத்தை ஏடாகூடமாக அந்தப் பெண்ணிடம், இந்தப் பெண் பணியாளர்
சொல்லிவிட்டார். அதனால்தான் மாலை அந்த சம்பவம் நடந்தது.

இப்போ சில கேள்விகள் எனக்குள்...

ஒருபெண், ஒரு நிறுவனத்தில் உள்ளே புகுந்து, கட்டிட உரிமையாளரிடமே தீ வைத்து விடுவேன் என மிரட்டியது திரைப்படத்தில் கூட வந்திருக்குமா என்பது சந்தேகமே.

இந்த பெண் இப்படி பேசுமுன் யோசித்துத்தான் பேசுகிறாரா?

பேசினால் அதன் பின் என்ன விளைவு வரும் என உணர்ந்தாரா?

மதியம் படி ஏறமுடியவில்லை என்றவர் இரண்டுமாடி ஏறியது எப்படி?

மதியம் பேசியது அலட்டலா?

ஒரு நிறுவனத்தில் வந்து ஒருவரை சந்திக்கவேண்டும் என்றால் சுய ஒழுங்கு இல்லாமல் இப்படி எப்படி நடந்துகொள்ளமுடிகிறது?

இவரது குழந்தைகளை எப்படி வளர்த்துவார்? அவர்களின் எதிர்காலம் என்ன?

ஒருவேளை வருங்காலத்தில் மருமகள் எடுத்தால் அவளின் நிலை என்ன?

இதில் இரண்டு மகளிர் குழுவுக்கு தலைவியாம். அந்த மகளிர் எப்படி மேம்படுவர்?

ஒருவேளை ஏதேனும் அரசியல்’தொடர்பு’ இருந்தால்கூட இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா?



இதன் தொடர்ச்சியாக இனிமேல் யாரும் அலுவலக நேரத்தில் சந்திக்க
அனுமதித்து இருந்ததை ரத்து செய்துவிட்டார் நண்பர். ”கொடுக்கிற சலுகைகளை
எப்படி தவறாக மாறி, நமக்கு இடைஞ்சலாகிறது பாருங்கள்” என்றார்.

பெண் பணியாளரின் கூடாநட்பும், சாதரண விசயத்தை பெரிது படுத்திய குணமும், இதர தொழிலாளர்களுக்கும் இடைஞ்சலையே தந்தது.

சாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்
தூரப்போடுவோமே. எல்லோருக்கும் நலமாக அமையும்

Friday, March 27, 2009

இந்த வீடியோவை பாருங்கள்....1





Super conductivity

This is an excellent demo of super conductivity. The liquid is liquid nitrogen. The disk is a magnet. The black block is the super conducting (SC) material (but becomes SC only below its critical temperature, somewhat higher than liquid nitrogen).

When warm, the block has no particular magnetic / electric properties. When cooled, it becomes a SC. One of the properties of a SC is that magnetic fields can be pinned in place in the SC.

A moving magnetic field generates eddie currents within conductors, and can be felt as a resistance to relative motion. In most materials, this current quickly decays due to electrical resistance. In SC, eddie currents do not decay, but instead will tend to hold the magnetic field in place.

நன்றி, மீண்டும் சந்திப்போம்

Wednesday, March 25, 2009

இடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா?

இன்றிலிருந்து இடது, வலது என்றெல்லாம் பிரித்து பார்க்கக் கூடாது. இதில் எந்த அரசியல் உள்குத்தும் கிடையாது.

இனிமேல் சாலையில் செல்லும் பொழுது இடப்பக்கம், வலப்பக்கம் எப்படி வேண்டுமானாலும் போகும்படி விதிகளை மாற்றவேண்டும்.

இடப்பக்கம் என்ன தாழ்ந்துவிட்டது. ஏன் எங்களை இடப்பக்கமாகவே போகச் சொல்கிறீர்கள்?
இரண்டு பக்கமும் ஒரே திசை நோக்கி போக அனுமதிக்க வேண்டும்.

பொதுஇடங்களில் கைகளினால் செய்யும் பணிகளை காலால் செய்ய அனுமதிக்கவேண்டும். கால் எந்த விதத்தில் கையைவிட குறைந்துவிட்டது. இதிலும் எந்த அரசியலும் இல்லை.

நீங்கள் பாராட்டுதலுக்காக கை கொடுத்தாலோ, கும்பிட்டாலோ ப்திலுக்கு நான் காலை பயன்படுத்தினால் கோபம் கொள்ளக்கூடாது. கையைவிட கால் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது.

உணர்ச்சி வசப்படாதீர்கள். கோவி அண்ணாரின் கட்டுரையை படித்தவுடன் எழுதியது.

இனி என் கருத்துகள்

//வெறும் தாள், செய்தித்தாள், ஏனைய தாள்களை சரஸ்வதியாக நினைத்துக் கொள்ள வேண்டும், அதன் மீது கால்படுவது சரஸ்வதியை அவமதிப்பதாகும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையாகவே படுகிறது// மூட நம்பிக்கைதான். கூடவே எது நம்பிக்கை, இதில் உள்ள உண்மைத்தத்துவம் என்ன? காலப்போக்கில் எப்படி மூடநம்பிக்கையாய் மாறியது என்று விளக்கினால் பொறுப்பான எழுத்தாக
அமையும்.

//அதன் மீது கால்படுவது சரஸ்வதியை அவமதிப்பதாகும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையாகவே படுகிறது// //வலது கை புனிதம், இடது கை பீச்சாங்கை என்றெல்லாம் இழித்து பேசுவதும், இடது கையால் பொருளை எடுத்துக் கொடுக்க கூடாது, சாப்பிடக் கூடாது என்பது மூட நம்பிக்கைகளின் எச்சங்களாக நம்மிடையே இருந்துவருகிறது. கையை விட கால்கள் எந்த விதத்தில் மதிப்பு குறைந்தது என்று தெரியவில்லை//.

வெகு எளிமையாக இயல்பாக வலது, இடது கைகள் ஒரேமாதிரியான வேலைகளுக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

அடிப்படை நோக்கம் ஆரோக்கியம். எதோ ஒரு கை உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும், மறுகை உணவு உண்ணவும் பன்படுத்தப்பட்டது. கவனக்குறைவாக கையை சுத்தப்படுத்துதலில் குறைநிகழும்போது, ஆரோக்கிய குறைபாடு நிகழாவண்ணம் த்டுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஒருகையை குறிப்பிட்ட வேலைக்கு பயன்படுத்துவது. மாற்றிமாற்றி பயன்படுத்தினால்
என்ன விளைவு என்பதைப் பாருங்கள்?.

கால் பட்டவிதம் தற்செயலா, அல்லது தெரிந்தே, வேண்டுமென்றே பட்டதா என்பதை உணர்த்தும் செயற்குறிப்புதான், தெரியாமல் பட்டுவிட்டது எனக்காட்ட தொட்டு கண்ணில் ஒற்றுதல். இதில் என்ன மூடநம்பிக்கையை இருக்கிறது. குற்றமா இல்லையா என்பதல்ல, தெரிந்தா, தெரியாமலா என்பதே இங்கே முக்கியம்.

//இன்னும் தாள்களுக்கு அப்படி ஒரு மரியாதை கொடுப்பது பழைய பழக்கவழக்கத்தினால் வந்த பொருளற்ற செயலாகவே எனக்கு தெரிகிறது.// எந்தப் பொருளுக்கும் பழக்கம் காரணமாக ம்ரியாதை கொடுப்பது பொருளற்ற செயல்தான். உணர்ந்து கொடுப்பதே சிறப்பு.

//விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி நடக்கவே முடியாது, // எனக்கு இது புதிது. தொடர்ந்து இதுபோல் நிறைய உலகமறியாத உண்மைகளை எழுதவும்.

//மூத்தோர் கால்களில் விழுவதும் கூட சிறப்பானது தான். காலை இழிவு என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது என்றார்.// இவர் யார் காலிலாவது விழுந்தால் அவர் காலை உயர்வாக மதிக்க விழுவார். நம்மைப் போன்றோர் அவர்களிடம் நாம் காட்டும் பணிவையும், உள்ளத்தில் உள்ள உயர்வை வெளிக்காட்ட வார்த்தைகள் இன்றி, சுருக்கமாக உணர்த்தும் செயற்குறிப்பாகவே விழுகிறோம்.

//கையினால் மாட்டு சாணியை பிள்ளையாராக பிடித்து வணங்குபவர்கள், தாளை சரஸ்வதியாக நினைத்து கால்படக் கூடாது என்று சொல்வது முரணாக இருக்கிறது.//

மாட்டுசாணியை வரட்டி தட்டியும், சாணிக்குழியில் சேர்த்து உரமாக்கியும்,வீட்டிற்க்கு பாதுகாப்பாக சுத்தம் கருதி வழித்தும் தான் மட்டமாக பயன்படுத்த தெரியும். சாணியை பிள்ளையாராக வணங்குபவர்கள், தாளை சரஸ்வதியாக நினைப்பது சரிதானே? இதில் என்ன முரண்.?
முரணாகவே இருக்கட்டும் இதில் யாருக்கு என்ன நட்டம்?


//ஆனால் வழிபாட்டு உருவங்களை டாய்லெட் பேப்பர்களில் அச்சிடுவது மிகவும் தவறான ஒன்று, சமூக ஒற்றுமைக்கு எதிரானது, அந்த செயல் நம்பிக்கை உடையவர்களை அவமதிப்பதாகும். அந்த கடவுளை வணங்குபவர்களின் மனங்களை புண்படச் செய்யும். அதை எல்லாம் தவிர்கலாம்.//
//ஒரு தாளில் கால் தெரிந்தோ, தெரியாமலோ படுவதால் என்ன குற்றம் ஆகிவிடப் போகிறது ?//

பிராமணர் வீட்டு ஒருவயது குழந்தை சரஸ்வதி படத்தின் மீது ஒன்னுக்கு போய்ட்டா அது ச்மூக ஒற்றுமைக்கு எதிரானாதா?

அவன் எதை அச்சிட்டான் என்று பார்ப்பதோடு, எந்த நோக்கத்துடன் அச்சிட்டான் என்று அறிந்துகொள்வது நல்லது. வெறுமனே படம் நன்றாக உள்ளது என அச்சிட்டு இருந்தால், அந்த படத்தின் சிறப்பை, உயர்வை தகுந்த முறையில் எடுத்துச் சொன்னால் தானாக எடுத்து விட்டுப் போகிறான்.

ஒருவேளை தெரிந்தே செய்திருந்தால், நம் எதிர்கருத்தை தெரிவிக்கலாம். மாற்று நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம்.

எதை எப்படி பார்க்கவேண்டும் என்று தெரிந்தவரை சொல்லித்தராமல், சும்மா புறங் கூறுவது கோவியாருக்கு அழகல்ல.

Tuesday, March 24, 2009

தைரியம் உள்ளவர்களிடம் சில கேள்விகள்....

ஒரு ஜோக்

"தம்பி.. என்ன வேலை செய்கிறீர்கள்?"

"அப்பாவுக்கு உதவியாக, ஒத்தாசையாக இருக்கிறேன்."

"வெரிகுட், அப்பா என்ன செய்கிறார்?"

"சும்மா வீட்ல இருக்கிறார்"

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இந்த இளைஞன் , 'தான் காலத்தை வீணாக்குகிறோம்' என்ற குற்ற உணர்வே இல்லாத இவன் எப்படி முன்னேற முடியும்?

நம் நிலைமையை சற்று ஆய்வு செய்து பார்ப்போம்.

இப்போது நாம் இருக்கும் நிலை என்ன?

நம் குடும்பத்தின் நிலை என்ன?

வேலையில் கற்றுக் கொள்ளவேண்டியது என்ன?

முழுதிறனுடன் உழைக்கிறோமா?

வாய்ப்புகள் நம்மை தேடி வரும்படி நம்மை தகுதியாக்கி கொண்டோமா?

நம்முடைய சுயபொருளாதாரம் எப்படி இருக்கிறது?

இது போன்ற சின்னச் சின்ன கேள்விகள் உங்களுக்குள் பிறந்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக விடைகள் கிடைக்கத் தொடங்கும். விளக்கம் செயலுக்கு வரும்.

ஒன்றை மறந்து விடாதீர்கள். எவ்வளவு பெரிய கதவுக்கும் தாழ்ப்பாள் சின்னதுதான். பூட்டோ அதை விடச் சின்னது. சாவியோ.....பூட்டை விடச் சின்னது.

சரியான சிறிய சாவியால் பூட்டைத் திறக்கலாம். பூட்டைத் திறந்தால் தாழ்ப்பாளை திறந்து, பெரிய கதவையே சுலபமாக திறக்கலாம்.

எனவே சின்னச் சின்ன கேள்விகள், பெரிய பெரிய கோட்டை வாயில்களைத் திறக்கப் போகும் சாவிகள். உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள். அவை பெரிய பெரிய வந்த, வரப்போகும் பிரச்சினைகளை தகர்க்கும் சாவிகள்.

வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்

நன்றி; சுகி சிவம் அவர்களின் வெற்றி நிச்சயம் நூலிலிருந்து.