இயற்கை வைத்தியம் குறித்து எங்களுடன் வந்த டாக்டர் திரு.சுப்ரமணியம் அவர்கள் உரை நிகழ்த்த அனைவரும் ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருந்தோம்.சூரியன் மெல்ல மறையத் தொடங்க, நேரம் மாலை 6.45 க்கு மேல் ஆகிவிட்டது. மலைப்பிரதேசத்தில் சூரியன் மறைய நேரம் ஆவதுபோல் உணர முடிந்தது.
சரி இனி பேருந்திலேயே தங்க வேண்டியதுதான் என சிந்தனை செய்து கொண்டே சாலையைத் தாண்டி பேருந்துக்கு வந்தேன், ரோடில் வேன் ஒன்று வந்தது.அருகில் உள்ள ஊரிலிருந்து அதுபோல் அடிக்கடி வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன. சற்று நம்பிக்கையுடன் உயரே பார்க்க வரிசையாக வாகனங்கள் மலைமீது இருந்து இறங்கி வர ஆரம்பித்தது தெரிந்தது.
Wednesday, October 27, 2010
Wednesday, October 13, 2010
இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..8
ரிஷிகேஷ்லிருந்து கங்கை நதிக்கு செல்லும் வழி, மற்றும் ஊருக்குள் எனக்குத்தெரிந்தவரை இறைச்சி விற்கும் கடைகள் எங்குமே இல்லை. மதுபானக் கடைகளும் இல்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
தமிழ்நாட்டில் அரசே மதுக்கடைகளை அக்கறையோடு நடத்துவதும், இறைச்சிக்கூடங்கள் அமைத்திருப்பதையும் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. மக்கள் சரியாக இருந்தால் அரசைக் குறை சொல்ல வேண்டியதில்லை:).
Subscribe to:
Posts (Atom)